Search

GRATIS E-BOOKS EN AUDIOBOEKEN

Het Evangelie van het Water en de Geest?

Tamil  1

நீங்கள் உண்மையிலேயே நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா? [புதிய திருத்தப்பட்ட பதிப்பு]

Rev. Paul C. Jong | ISBN 9788928261642 | Pagina’s 647

Download GRATIS e-books en audioboeken

Kies uw gewenste bestandsformaat en download veilig naar uw mobiele apparaat, PC of tablet om de prekencollecties overal en altijd te lezen en te beluisteren. Alle e-books en audioboeken zijn volledig gratis.

U kunt het audioboek beluisteren via de onderstaande speler. 🔻
Bezit een paperback
பொருளடக்கம்
 
பகுதி ஒன்று—பிரசங்கங்கள்
1. மீட்பைப் பெற, முதலில் நமது பாவங்களை அறிந்திருப்பது அவசியம் (மாற்கு 7:8-9, 7:20-23) — 25
2. மனிதர்கள் பிறவிப் பாவிகள் (மாற்கு 7:20-23) — 55
3. நாம் நியாயப்பிரமாணத்தின்படி கிரியைகளைச் செய்தால், அது நம்மை இரட்சிக்க முடியுமா? (லூக்கா 10:25-30) — 77
4. நித்திய மீட்பு (யோவான் 8:1-12) — 115
5. இயேசுவின் ஞானஸ்நானமும் பாவ நிவர்த்தியும் (மத்தேயு 3:13-17) — 171
6. இயேசு கிறிஸ்து தண்ணீர், இரத்தம் மற்றும் ஆவியினால் வந்தார் (1 யோவான் 5:1-12) — 261
7. இயேசுவின் ஞானஸ்நானமே பாவிகளுக்கான மீட்பின் ஒப்பனையானது (1 பேதுரு 3:20-22) — 323
8. அபரிமிதமான பாவ நிவர்த்தியின் சுவிசேஷம் (யோவான் 13:1-17) — 355

பகுதி இரண்டு—பின்னிணைப்பு
1. இரட்சிப்பின் சாட்சிகள் — 475
2. கூடுதல் விளக்கம் — 505
3. கேள்விகளும் பதில்களும் — 561
 

இப்புத்தகத்தின் முக்கியப் பொருள் "தண்ணீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறப்பது" என்பதாகும். இப்பொருள் குறித்து இது தனித்துவத்தைக் கொண்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், மறுபடியும் பிறப்பது என்றால் என்ன என்பதையும், வேதாகமத்தின்படி மிகத் துல்லியமாக தண்ணீரினாலும் ஆவியினாலும் எவ்வாறு மறுபடியும் பிறப்பது என்பதையும் இப்புத்தகம் நமக்குத் தெளிவாகக் கூறுகிறது. அந்தத் தண்ணீர் யோர்தானில் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தை அடையாளப்படுத்துகிறது; மேலும், யோவான் ஸ்நானகனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது, நம்முடைய பாவங்கள் அனைத்தும் அவர்மீது சுமத்தப்பட்டன என்று வேதாகமம் கூறுகிறது. யோவான், மனுக்குலம் முழுவதற்கும் பிரதிநிதியாகவும், பிரதான ஆசாரியராகிய ஆரோனின் வழித்தோன்றலாகவும் இருந்தார். பாவநிவாரண நாளன்று, ஆரோன் போக்கின் ஆட்டின் தலையின்மேல் தன் கைகளை வைத்து, இஸ்ரவேலர்களின் வருடாந்திர பாவங்கள் அனைத்தையும் அதன்மேல் சுமத்தினான். இது வரப்போகும் நன்மைகளுக்கு நிழலாக இருக்கிறது. கைகளை வைத்தலுக்குப் பதிலீடான நிஜமாக இயேசுவின் ஞானஸ்நானம் இருக்கிறது. யோர்தானில் கைகளை வைக்கும் முறையிலேயே இயேசு ஞானஸ்நானம் பெற்றார். ஆகவே, அவர் தமது ஞானஸ்நானத்தின் மூலம் உலகத்தின் பாவங்கள் அனைத்தையும் சுமந்துகொண்டு, அப்பாவங்களுக்காகக் கிரயம் செலுத்த சிலுவையில் அறையப்பட்டார். ஆனால், இயேசு ஏன் யோர்தானில் யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்றார் என்பதைப் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கவில்லை. இயேசுவின் ஞானஸ்நானமே இப்புத்தகத்தின் திறவுகோலாகவும், தண்ணீர் மற்றும் ஆவியின் சுவிசேஷத்தின் இன்றியமையாத பகுதியாகவும் இருக்கிறது. இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவருடைய சிலுவையையும் விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே நாம் மறுபடியும் பிறக்க முடியும்.
Meer
The New Life Mission

Doe mee aan ons onderzoek

Hoe heeft u over ons gehoord?